கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 -ஆக உயர்ந்துள்ளது.
கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட பாபுசாப்பாளையாவில் கனமழையின் காரணமாக புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக விடிய விடிய மீட்புப் பணி நடைபெற்றன.
இந்த விபத்தில் ஏற்கனவே 3 பேர் பலியான நிலையில், தற்போது மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.