ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார். அங்கு கசான் நகரில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது, பிராந்தியத்தில் அமைதி திரும்பவும் நிலைத்தன்மை ஏற்படவும் இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபரிடம் பிரதமர் தெரிவித்தார். மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
இதையடுத்து ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
இன்று சீன அதிபர் ஜி -ஜிங்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். முன்னதாக இந்திய-சீன எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாடுகளிடயே உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன