ரோட்டில் அனாதையாக சுற்றித்திரிந்த, மூன்று பூனை குட்டிகளை தம்பதி தத்தெடுத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி நகர் சரோஜினி தெருவின் சாலையில் ஓரமாக பிறந்த 20 நாட்களே ஆன 3 பூனை குட்டிகள் ரோட்டில் அனாதையாக, சுற்றி வந்ததுள்ளது.
இதனை கண்ட தம்பதியினர் அந்த பூனை குட்டிகளுக்கு பால் கொடுத்து பசி ஆற்றினார்கள். சிறிது நேரம் அருகிலேயே அமர்ந்திருந்து இதனை இங்கே விட்டு சென்றாள் வாகனத்தில் அடிபட்டு இறந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு அட்டைப்பெட்டியை கொண்டு வந்து, அந்த மூன்று குட்டிகளையும் தம்பதியினர் எடுத்துச் சென்றனர். இந்த செயல் அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.