மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்களுள் மருது சகோதரர்கள் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில், காளையார் கோவிலில் வரும் 27-ம் தேதியன்று மருது சகோதரர்களின் குருபூஜை நடைபெற உள்ளது.
இதையொட்டி மாவட்டம் முழுவதும் வருகிற 23-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 144தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.