கட்டண சேனல்களின் விலை உயர்வை வாபஸ் பெறக்கொரி சென்னை எழும்பூரில்
கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
சேனல்களின் விலையை 19 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக குறைக்க வேண்டும், கேபிள் டிவிக்கு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும், OTT தளங்களை தடை செய்ய வேண்டும் அல்லது முறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் போராட்டம் நடத்தினர்.