போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் களத்தில் வந்து இறங்கி பாருங்கள், எங்களுடைய கஷ்டம் தெரியும் என திமுக எம்எல்ஏ தளபதியிடம் மதுரை மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், ஆளைவிட்டால் போதும் என அவர் ஓட்டம் பிடித்தார்.
மதுரையில் பெய்த கனமழையால், மாநகராட்சி 27 -வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகர், பெரியார் வீதி, வாஞ்சிநாதன் தெரு, போஸ் வீதி, மற்றும் காமராஜர் தெரு உள்ளிட்ட பிரதான சாலை முழுவதிலும் தண்ணீரில் மூழ்கியது.
மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கியதால், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், அந்த வழியாக சென்ற திமுக வடக்கு எம்எல்ஏ கோ.தளபதியை அப்பகுதி பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
ஓட்டு கேட்க மட்டும் வந்தால் போதுமா, இப்ப வந்து பாருங்கள் ஏரியாவே தண்ணீரில் மிதக்கிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வாகன ஓட்டுநரிடம் வண்டியை எடுக்க சொல்லி, அந்த இடத்தை விட்டே எம்எல்ஏ தளபதி அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.