ஆந்திர மாநிலம் கதிரியில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.
கதிரியில் இருந்து கடப்பா மாவட்டம் நோக்கி பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் 30 பேர் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்றுவரும் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.