சேலம் அருகே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்ரமிப்பு சுவர் மற்றும் 2 சிறிய கோவில்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
சேலம் மாநகராட்சி பச்சைப்பட்டி அசோக் நகர் பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டி, வக்பு வாரியம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஆக்ரமிப்பு பகுதிகளை இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து, தடுப்பு சுவர் மற்றும் இரண்டு சிறிய கோவில்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர். பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.