சென்னையில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 22 மாதங்களாக ஒப்படைக்கப்படாத ஓய்வூதிய தொகையை வழங்கவேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் வாழ்நாள் சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் சாலையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணி முதல் இந்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஓய்வுபெற்ற அரசுப்போக்குவரத்து ஊழியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இதை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.