கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி வாகன பாஸ் தயாரித்து கனிம வள கடத்தலுக்கு துணைபோன 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து போலி வாகன பாஸ் மூலம் டாரஸ் லாரிகளில் கேரளாவிற்கு ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கனிம வளம் கடத்தி செல்லப்படுவதாக எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இது குறித்த விசாரணை நடத்திய போலீசார், போலி பாஸ்களை அச்சிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.