விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
சிவகாசியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் உபயோக கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தனது காரில் திருத்தங்கலில் இருந்து சிவகாசி நோக்கி சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து புகை வரத்தொடங்கியதால் ஸ்டீபன் உடனடியாக காரை நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் ஸ்டீபன் தீயணைப்புத்துறைக்கு தகவலளித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.