சென்னை கொடுங்கையூர் பகுதியில் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்த கல்லூரி மாணவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கொடுங்கையூர் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸார், ஏழு பேரை கைது செய்து 250 கிராம் மெத்தமெட்டமைன்
போதைப்பொருளை கைப்பற்றினர்.
இதில், 4 பேர் பொறியியல் படித்து வரும் நிலையில், ஒருவர் முதுநிலை வேதியியல் படித்து வருகிறார். அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் இவர்கள் வீட்டிலேயே ஆய்வகம் வைத்து போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரையில் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.