வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
அக்டோபர் 29-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகளும் அன்று தொடங்குகின்றன.
இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நடைபெற்றது.
இதில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் மாநில அளவில் திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நடைமுறைகள், சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.