திமுகவிடம் இருந்து அதிகளவிற்கு நிதி பெற்றுள்ளதால் திமுக கூட்டணியில் இருந்து பிற கட்சிகள் வெளியேறாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது, மக்கள் விரோத ஆட்சி நடந்தாலும் திமுக கூட்டணி கட்சிகளால் எதுவும் செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் ஏழை எளிய மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதை போல் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது. 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என கூறினார். இனி வரும் தேர்தல்களில் திமுகவால் வெற்றிபெற முடியாது என்றும் அவர் கூறினார்.
அமலாக்கத்துறை ரெய்டு விவகாரத்தில் வைத்திலிங்கம் நிரபராதி என நிரூபிப்பார் என்றும் தினகரன் தெரிவித்தார்.