திருவாரூர் மத்திய பல்கலைக் கழக சர்வதேச கருத்தரங்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இன்று, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, உளவியல் துறையில் ஆராய்ச்சிகளுக்கான வாய்ப்புகள் குறித்த 14-வது சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.
இந்தக் கருத்தரங்கில், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கேற்ப சாதகமான சூழல் உருவாக்குவது பற்றியும், பிரதமர்.நரேந்திர மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘தேசிய கல்விக் கொள்கை” மற்றும் கல்வித் துறைக்காக மத்திய அரசு செய்து வருகின்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது என தெரிவித்துள்ளார்.