ஆந்திரா தலைநகர் அமராவதிக்கு ரயில் சேவை வழங்க 2 ஆயிரத்து 245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆந்திரா தலைநகர் அமராவதிக்கு ரயில் வழித்தட இணைப்புக்காக ரூ.2,245 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம், சென்னை, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆந்திர தலைநகர் அமராவதியிலிருந்து போக்குவரத்து சுலபமாகும் என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
57 கிலோமீட்டர் தூரம் அமைய உள்ள இந்த இருப்பு பாதையின் இடையே அமராவதி ஆற்றில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் விண்வெளி துறையில் புதிய நிறுவனங்களை தொடங்கும் நோக்கில், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இந்த நிதி தேவையின் அடிப்படையில், ஆண்டுக்கு தலா 150 கோடி ரூபாய் முதல் 250 கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளுக்கு படிப்படியாக விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.