உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக
இந்தியா விளங்குகிறது என ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெறும் 18வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஆசிய-பசிபிக் மாநாடு இந்தியாவில் நடைபெறுவது என்பது சரியான நேரத்தில் சரியான இடம் என குறிப்பிட்டார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் எந்த நாடு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதோ அந்த நாடு பொருளாதாரத்தில் அபரிவிதமாக வளர்ச்சி பெறும் என ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.