திமுகவுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு டெக்னிக்கல் பிரச்சனை (technical Problem) என உதயநிதி கூறியுள்ளார்.
தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல்களை முறையாக பயிற்சி பெற்றவர்களை வைத்துப் பாடவைiks வேண்டும். பாடத் தெரியவில்லை என்றால் ரெக்கார்டு செய்த தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாட வைக்க வேண்டும்.
அதை செய்யாமல் தவறாக பாடுவது. தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். இவர்களுக்கு என்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு என்றால் ஒரு நியாயமா என்ற கேள்வி எழுகிறது.
எனவே தவறு யார் செய்தாலும் தவறு, தவறு தான். இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.