கர்நாடகாவில் குழந்தைகள் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த இருவர், 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு காரில் தப்பி சென்றனர்.
குழந்தைகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து
வழக்கு பதிவு செய்த போலீசார், கடத்தல்காரர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் கடத்தப்படுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.