தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் முக்கிய வீதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் 17 உயர் கோபுரங்கள் அமைத்ததுடன், 203 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை பார்வையிடும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.