ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக உயர்ந்து 35 ஆயிரம் கன அடியை எட்டியது. இந்நிலையில், நீர்வரத்து தற்போது 3 ஆயிரம் கன அடி குறைந்து தற்போது 32 ஆயிரம் கன அடியாக உள்ளது. மேலும், பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 14வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.