எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப் படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் விசைப்படகையும் சிறைப்பிடித்து சென்றனர்.
இந்நிலையில், கைதான 12 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மீனவ குடும்பங்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.