மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்காக போலி ஆவணங்கள் வழங்கிய மாணவர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் போதிய கட்டட வசதி இல்லாததால் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அலுவலரான கணேஷ்பாபு, கல்லூரியில் சேர்வதற்காக மாணவர் ஒருவர் போலி ஆவணங்களை அளித்துள்ளதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதுகுறித்து விசாரித்த போலீசார், போலி ஆவணங்களை அளித்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரது மகன் அபிஷேக்கை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.