அண்டை நாடுகளிலிருந்து மேற்குவங்கத்தில் ஊடுருபவர்களைத் தடுக்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் பெத்ரபோல் பகுதியில் உள்ள தரைவழித் துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் முனையத்தையும், சரக்குப் போக்குவரத்துக்கான நுழைவுவாயிலையும் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்தினால் மட்டுமே மேற்குவங்கத்தில் அமைதி நிலவும் என தெரிவித்தார். மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, எல்லையில் ஊடுருவுபவர்களைத் பாஜகவால்தான் தடுக்க முடியும் என சூளுரைத்தார்.