தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.
மஞ்சளாறு அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியான எலிவால் அருவி அமைந்துள்ளது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக எலிவால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை கண்டு ரசித்தனர். மேலும் சிலர் அருவியின் அழகை புகைப்படம் எடுத்துச் சென்றனர்.