சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, ஆணைவாரி மற்றும் முட்டல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஆணைவாரி மற்றும் முட்டல் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த 8-ம் தேதி முதல் அப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மழையின் தாக்கம் குறைந்ததால் அருவிகளில் குளிக்க 20 நாட்களுக்கு பின் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதேபோல், தேனியிலுள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.