ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே பறவைகளின் நலன் கருதி 18-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை புறக்கணிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளோடு பகுதியில் உள்ள சரணாலயத்துக்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது வெளிநாட்டுப் பறவைகளும் வலசை வருவது வழக்கம்.
தீபாவளிக்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில் சரணாலயத்தை சுற்றியுள்ள தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.