உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Mar 15, 2026, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Oct 30, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி வழங்கட்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர விடுத்துள்ள பதிவில், தீப ஒளித் திருநாள் என்று அனைவராலும் அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை, பாரத தேசம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ராம பிரான், ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து, அயோத்தி திரும்பிய நாளை தீபம் ஏற்றி தீபாவளி திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதை நினைவுபடுத்தும் நாளாகவும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்கள், சீக்கியர்களும் தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். பாரத தேசம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.

தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர்.

இந்த ஆண்டும் அதேச உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, மன மகிழ்ச்சியுடன் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை நாம் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகையாக மட்டுமல்லாமல் பொருளாதார பெருவிழாவாகவும் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு நடைபெறும் வர்த்தகத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தீபாவளி திகழ்கிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்கிறது.

உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று நமது பாசமிகு பாரதப் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவுறுத்தி வருகிறார். தீபாவளி தருணத்தில் நமது பகுதி மக்கள் தயாரித்த ஆடைகள், இனிப்புகளை வாங்குவோம். நமது பெருமை மிகு சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வோம்.

இந்த நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் தீய சக்திகள் அழித்து நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி நமக்கு வழங்கட்டும் என பிராத்திக்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Tags: L Murugandeepavali greetings
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் வியாபாரிகள் போராட்டம் – தற்காலிக கடைகள் அகற்றம்!

Next Post

தீபாவளி பண்டிகை – பூக்களின் விலை உயர்வு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies