உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Oct 3, 2025, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Web Desk by Web Desk
Oct 30, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி வழங்கட்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர விடுத்துள்ள பதிவில், தீப ஒளித் திருநாள் என்று அனைவராலும் அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை, பாரத தேசம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ராம பிரான், ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து, அயோத்தி திரும்பிய நாளை தீபம் ஏற்றி தீபாவளி திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதை நினைவுபடுத்தும் நாளாகவும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்கள், சீக்கியர்களும் தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். பாரத தேசம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.

தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர்.

இந்த ஆண்டும் அதேச உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, மன மகிழ்ச்சியுடன் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை நாம் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகையாக மட்டுமல்லாமல் பொருளாதார பெருவிழாவாகவும் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு நடைபெறும் வர்த்தகத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தீபாவளி திகழ்கிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்கிறது.

உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று நமது பாசமிகு பாரதப் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவுறுத்தி வருகிறார். தீபாவளி தருணத்தில் நமது பகுதி மக்கள் தயாரித்த ஆடைகள், இனிப்புகளை வாங்குவோம். நமது பெருமை மிகு சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வோம்.

இந்த நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் தீய சக்திகள் அழித்து நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி நமக்கு வழங்கட்டும் என பிராத்திக்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Tags: L Murugandeepavali greetings
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் வியாபாரிகள் போராட்டம் – தற்காலிக கடைகள் அகற்றம்!

Next Post

தீபாவளி பண்டிகை – பூக்களின் விலை உயர்வு!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies