ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் : மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் : மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 3, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் நாடெங்கும் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை என்றால் என்ன ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவில் (PMJAY) ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் என்பது மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, இந்தியக் குடிமக்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2018ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூக பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரத்தில், மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இதுவரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் பயனடைந்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், இதுவரை நான்கு கோடி ஏழை மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் தமிழகம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. குறிப்பாக, கடந்த ஜனவரி நிலவரப்படி, தமிழகத்தில் மட்டும், ஒன்றரை கோடி மக்களுக்கும் மேல் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர். அதாவது, சுமார் 6,887 கோடி ரூபாய்க்கு மருத்துவ பயன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆயுர் வேத தினமான, தன்வந்திரி ஜெயந்தி நன்னாளில், நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்திய பிரதமர் மோடி, அதற்கான ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இந்த, ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை வாயிலாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் சுமார் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6 கோடியே 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாழ்கிறார்கள்.

குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் இந்த இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சேவையை பெறமுடியும். மூத்த குடிமக்கள், ஆதார் அட்டையில் பதிவுசெய்யப்பட்ட வயதின் அடிப்படையில், 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் ஒரே அளவுகோலாகும்.

இந்த திட்டத்தில் பதிவு செய்ய தேவைப்படும் ஆவணம் குறிப்பிட்ட நபரின் ஆதார் அட்டை மட்டுமே என்பது சிறப்பம்சமாகும். ஏற்கனவே ஆயுஷ்மான் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டையை செயல்படுத்த eKYC செய்ய வேண்டும். மேலும், புதிய அட்டையை செயல்படுத்துவதற்கும் eKYC அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, ஆதாரில் பிறந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட பிறந்த ஆண்டின் ஜனவரி 1 பிறந்த தேதியாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ காப்பீடு அல்லது மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு உள்ளவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற்று கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் விரிவு படுத்தப் பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், இரண்டு கோடி குடும்பங்களும், மூன்று கோடி தனி நபர்களும் கூடுதலாக பயன் அடைவார்கள். இதில், 58 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Tags: PM ModiAyushman Bharat Health Insurance SchemeAyushman Vaya Vandana CardPradhan Mantri Jan Arogya Yojana (
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் – சிறப்பு கட்டுரை!

Next Post

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை – லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies