தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 09:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வேளச்சேரி பகுதி மக்கள் ரப்பர் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

வந்தாரை வாழவைக்கும் பெருமை கொண்ட சென்னையில் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் போதும் வந்தவர்கள் உட்பட அனைவரையும் வெளியேற்றும் ஊராக அமைந்திருக்கிறது. கடந்த கால டிசம்பர் மாதங்கள் ஏற்படுத்திய வெள்ள சேதங்கள் சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவரின் மனதில் ஆறாத வடுவாக இன்றளவும் பதிந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொள்கிறது. அதிலும் வேளச்சேரி பகுதி மக்களின் உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. போக்குவரத்து, மின்சாரம், தொலைதொடர்பு என எந்தவித வசதிகளும், அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளும் கிடைக்காமலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

நடப்பாண்டு டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த வேளச்சேரி பகுதி மக்கள், மழை வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையால் ஏற்படும் பாதிப்புகளின் போது அரசு மற்றும் மாநகராட்சியின் உதவியைப் பெற ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு ரப்பர் படகுகள், லைப் ஜாக்கெட்டுகள் என மழை மற்றும் புயால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை முழுமையாக தற்காத்துக் கொள்ளும் பணிகளில் வேளச்சேரி பகுதி இறங்கியுள்ளனர்.

மழை வெள்ள காலங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வேளச்சேரி டான்ஸி நகரில் உள்ள குடியிருப்புவாசிகள் இணைந்து நிதி திரட்டி ரப்பர் படகு மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மாநகர மக்கள் அச்சப்படும் சூழல் நிலவும் நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்கவோ, மழைவெள்ளத்திலிருந்து அவர்களை பாதுகாக்கவோ தமிழக அரசு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாததே, குடியிருப்புவாசிகளே ரப்பர் படகுகளையும் லைப் ஜாக்கெட்டுகளையும் வாங்கக்கூடிய அவல நிலையை உருவாக்கியுள்ளது.

Tags: life jacketsrubber boatschennai floodtamil nadu governmentVelachery flood
Share
Tweet
SendShare
Previous Post

யார் இந்த பிபேக் டெப்ராய்? இந்திய ரயில்வே துறையை மாற்றியமைத்த வித்தகர் – சிறப்பு கட்டுரை!

Next Post

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் : மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம் – சிறப்பு கட்டுரை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies