தெலங்கானாவில் DELIVERY BOY ஆக பணியாற்றும் பொறியியல் பேராசிரியர்கள் - சிறப்பு தொகுப்பு!
Aug 17, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் DELIVERY BOY ஆக பணியாற்றும் பொறியியல் பேராசிரியர்கள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேராததால் பணி இழந்த பேராசிரியர்கள், டெலிவரி ஊழியர்களாகவும் பைக் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் வேலை செய்கின்றனர். இந்த வேலை இழப்பு நிகழ்ந்தது எப்படி? தெலுங்கானா தொழில்நுட்பக் கல்வித் துறையில் என்ன நடக்கிறது? என்பது பற்றி பார்ப்போம்.

தெலங்கானா மாநிலத்தில், சுமார் 175 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 86,943 பொறியியல் இடங்கள் இந்த கல்லூரிகளில் உள்ளன. முக்கியமாக கணினி அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் மட்டும் 61,587 இடங்கள் உள்ளன. சிவில் மற்றும் மெக்கானிக்கல் போன்ற பாரம்பரிய பொறியியல் பிரிவில் மொத்தம் 7,458 இடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறைகளில் வெறும் 4,751 இடங்களே உள்ளன.

மேலும், இந்த துறைகளில், சுமார் 25 சதவீத இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படாமல் வீணாகிறது. நாட்டில் அதிகமான பொறியியல் வல்லுனர்களின் தேவை இருக்கும் நிலையில், இந்த புள்ளிவிவரம் அதிர்ச்சியைத் தருகிறது.

பாரம்பரிய பொறியியல் துறைகளான சிவில்,மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. AI, DATA சயின்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற நவீன அறிவியல் துறைகள் வேகமாக வளர்ந்து வருகிறது.

அதனால், தெலங்கானாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளும், இந்த பாரம்பரிய பொறியியல் துறைகளை விட AI, DATA சயின்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்றன.

2020ஆம் ஆண்டிலிருந்தே, பாரம்பரிய பொறியியல் துறைகளில் அதிக பட்சமாக 70 சதவீதம் வரை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அந்தந்த துறைகளில் பணியிலிருந்த மூத்த பொறியியல் பேராசிரியர்களுக்கு கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை சம்பளம் குறைக்கப் பட்டது. பின்னர் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

பணி இழந்த பல பேராசிரியர்களுக்கு வேறு கல்லூரிகளிலும் வேலை கிடைக்கவில்லை. எனவே, டெலிவரி பாய் ஆக , பைக் ஓட்டுநராக தெருவோர கடைகளில் ஊழியராக, பணியாற்றி வருகின்றனர்.

டெலிவரி பாய் ஆக வேலை பார்க்கும் முன்னாள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர், ஒரு நாளைக்கு சுமார் 600 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

பல அனுபவமிக்க பேராசிரியர்களைக் கல்வி நிறுவனங்களோ அல்லது தொழில் நிறுவனங்களோ பணியமர்த்த முன்வராததால் பலர் வேலை கிடைக்காமல் கஷ்டப் படுவதாக, தெலுங்கானா தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஸ்ரீனிவாஸ் வர்மா கூறியுள்ளார்.

அடுத்த கல்வியாண்டு முதல், தொழில்துறையின் தேவைக்கேற்ப புதிய படிப்புகள் அல்லது இடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள தொழில்நுட்பக் கல்வித் துறையின் அதிகாரிகள், ஒரு படிப்பில் அதிகபட்சமாக 120 இடங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படும் என்று தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், முக்கிய பொறியியல் பாடங்களைப் பயிற்றுவிக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பேராசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Tags: delivery workersbike taxi driversTelanganaprofessors lost jobsprivate engineering collegesnsufficient enrollment
ShareTweetSendShare
Previous Post

குன்னூரில் கார் மீது முறிந்து விழுந்த மரம் – ஓட்டுநர் உயிரிழப்பு!

Next Post

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜஸ்டிசியா ஆர்யா பூக்கள்!

Related News

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies