தெலங்கானாவில் DELIVERY BOY ஆக பணியாற்றும் பொறியியல் பேராசிரியர்கள் - சிறப்பு தொகுப்பு!
Apr 29, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் DELIVERY BOY ஆக பணியாற்றும் பொறியியல் பேராசிரியர்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 3, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேராததால் பணி இழந்த பேராசிரியர்கள், டெலிவரி ஊழியர்களாகவும் பைக் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் வேலை செய்கின்றனர். இந்த வேலை இழப்பு நிகழ்ந்தது எப்படி? தெலுங்கானா தொழில்நுட்பக் கல்வித் துறையில் என்ன நடக்கிறது? என்பது பற்றி பார்ப்போம்.

தெலங்கானா மாநிலத்தில், சுமார் 175 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 86,943 பொறியியல் இடங்கள் இந்த கல்லூரிகளில் உள்ளன. முக்கியமாக கணினி அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் மட்டும் 61,587 இடங்கள் உள்ளன. சிவில் மற்றும் மெக்கானிக்கல் போன்ற பாரம்பரிய பொறியியல் பிரிவில் மொத்தம் 7,458 இடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறைகளில் வெறும் 4,751 இடங்களே உள்ளன.

மேலும், இந்த துறைகளில், சுமார் 25 சதவீத இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படாமல் வீணாகிறது. நாட்டில் அதிகமான பொறியியல் வல்லுனர்களின் தேவை இருக்கும் நிலையில், இந்த புள்ளிவிவரம் அதிர்ச்சியைத் தருகிறது.

பாரம்பரிய பொறியியல் துறைகளான சிவில்,மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. AI, DATA சயின்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற நவீன அறிவியல் துறைகள் வேகமாக வளர்ந்து வருகிறது.

அதனால், தெலங்கானாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளும், இந்த பாரம்பரிய பொறியியல் துறைகளை விட AI, DATA சயின்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்றன.

2020ஆம் ஆண்டிலிருந்தே, பாரம்பரிய பொறியியல் துறைகளில் அதிக பட்சமாக 70 சதவீதம் வரை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அந்தந்த துறைகளில் பணியிலிருந்த மூத்த பொறியியல் பேராசிரியர்களுக்கு கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை சம்பளம் குறைக்கப் பட்டது. பின்னர் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

பணி இழந்த பல பேராசிரியர்களுக்கு வேறு கல்லூரிகளிலும் வேலை கிடைக்கவில்லை. எனவே, டெலிவரி பாய் ஆக , பைக் ஓட்டுநராக தெருவோர கடைகளில் ஊழியராக, பணியாற்றி வருகின்றனர்.

டெலிவரி பாய் ஆக வேலை பார்க்கும் முன்னாள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர், ஒரு நாளைக்கு சுமார் 600 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

பல அனுபவமிக்க பேராசிரியர்களைக் கல்வி நிறுவனங்களோ அல்லது தொழில் நிறுவனங்களோ பணியமர்த்த முன்வராததால் பலர் வேலை கிடைக்காமல் கஷ்டப் படுவதாக, தெலுங்கானா தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஸ்ரீனிவாஸ் வர்மா கூறியுள்ளார்.

அடுத்த கல்வியாண்டு முதல், தொழில்துறையின் தேவைக்கேற்ப புதிய படிப்புகள் அல்லது இடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள தொழில்நுட்பக் கல்வித் துறையின் அதிகாரிகள், ஒரு படிப்பில் அதிகபட்சமாக 120 இடங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படும் என்று தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், முக்கிய பொறியியல் பாடங்களைப் பயிற்றுவிக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பேராசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Tags: delivery workersbike taxi driversTelanganaprofessors lost jobsprivate engineering collegesnsufficient enrollment
ShareTweetSendShare
Previous Post

குன்னூரில் கார் மீது முறிந்து விழுந்த மரம் – ஓட்டுநர் உயிரிழப்பு!

Next Post

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜஸ்டிசியா ஆர்யா பூக்கள்!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies