சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பாதாள கழிவு நீர்க் குழாயில் அடைப்பு உள்ளதாகவும், அதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி வருவதாகவும் கூறப்படும் நிலையில், இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்த மக்கள் நிரந்த தர தீர்வை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
















