பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்!
Aug 15, 2025, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான சாரதா சின்கா உடல்நலக்குறைவால் காலமானார்.

பீகாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். இவர், போஜ்புரி மொழியில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு சாரதா சின்ஹாவுக்கு புற்றுநோய் இருப்பது  கண்டறியப்பட்டதையடுத்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சாரதா சின்ஹாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக பாட்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டுப்புற கலைஞர் சாரதா சின்ஹா மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர் சாரதா சின்ஹா ​​ஜியின் மறைவுஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மைதிலி மற்றும் போஜ்புரி நாட்டுப்புற பாடல்கள் கடந்த பல தசாப்தங்களாக மிகவும் பிரபலமாக உள்ளன.

நம்பிக்கையின் பெரிய திருவிழாவான சாத் உடன் தொடர்புடைய அவரது மெல்லிசைப் பாடல்கள் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Bhojpuri singer Saratha Sinha passed awaypm modi condolence
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை!

Next Post

திருச்செந்தூர் சுற்றுலாத்துறை விடுதிகளில் தண்ணீர் இல்லாத அவலம் – பக்தர்கள் அவதி!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies