சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி - தேவஸ்தானம் ஏற்பாடு!
Aug 19, 2025, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி – தேவஸ்தானம் ஏற்பாடு!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சபரிமலையில் மண்டல கால பூஜை வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 5 ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் 5 தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கல் மகாதேவர் கோயில் வரிசை வளாகத்தில் 1000 பக்தர்கள் ஓய்வு எடுக்கலாம். நிலக்கல் பஸ் நிலையம் அருகே 3 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் ஜெர்மன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

பம்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 வரிசை வளாகங்களில் 4 ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி உள்ளது. பம்பையில் மேலும் 3 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குழாய் மூலம் வெந்நீர் வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு பிஸ்கெட்டுகள், சுக்கு வெந்நீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பம்பையில் பெண்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற தமிழக அரசு பேருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சபரிமலை செல்லும் பஸ்கள், வேன்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் பம்பை வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு சபரிமலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து நிலக்கல் வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பம்பையிலிருந்து பக்தர்களை ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேரள அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தற்போது கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

பம்பையிலுள்ள கேரள அரசு பஸ் நிலையத்தில் தமிழக பேருந்துகளை நிறுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மண்டல காலம் முதல் தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் பம்பையிலிருந்து தமிழக அரசு பேருந்துகளில் ஏற வசதி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Devoteessabarimalatamilnadu busiyappan templeMandala Puja
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவில் பணியாற்றாத நிர்வாகிகளுக்கு கல்தா : களையெடுக்கும் இ.பி.எஸ் – சிறப்பு தொகுப்பு!

Next Post

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் : மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி? சிறப்பு தொகுப்பு!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies