சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி - தேவஸ்தானம் ஏற்பாடு!
Mar 15, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி – தேவஸ்தானம் ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சபரிமலையில் மண்டல கால பூஜை வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 5 ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் 5 தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கல் மகாதேவர் கோயில் வரிசை வளாகத்தில் 1000 பக்தர்கள் ஓய்வு எடுக்கலாம். நிலக்கல் பஸ் நிலையம் அருகே 3 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் ஜெர்மன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

பம்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 வரிசை வளாகங்களில் 4 ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி உள்ளது. பம்பையில் மேலும் 3 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குழாய் மூலம் வெந்நீர் வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு பிஸ்கெட்டுகள், சுக்கு வெந்நீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பம்பையில் பெண்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற தமிழக அரசு பேருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சபரிமலை செல்லும் பஸ்கள், வேன்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் பம்பை வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு சபரிமலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து நிலக்கல் வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பம்பையிலிருந்து பக்தர்களை ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேரள அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தற்போது கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

பம்பையிலுள்ள கேரள அரசு பஸ் நிலையத்தில் தமிழக பேருந்துகளை நிறுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மண்டல காலம் முதல் தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் பம்பையிலிருந்து தமிழக அரசு பேருந்துகளில் ஏற வசதி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Devoteessabarimalatamilnadu busiyappan templeMandala Puja
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவில் பணியாற்றாத நிர்வாகிகளுக்கு கல்தா : களையெடுக்கும் இ.பி.எஸ் – சிறப்பு தொகுப்பு!

Next Post

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் : மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி? சிறப்பு தொகுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies