பட்டாவுக்காக பரிதவிப்பு : 6 தலைமுறைகளாக தொடரும் போராட்டம் - சிறப்பு தொகுப்பு!
Sep 30, 2025, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டாவுக்காக பரிதவிப்பு : 6 தலைமுறைகளாக தொடரும் போராட்டம் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயபுரம் தொகுதியில் வசிக்கும் மக்கள் 6 தலைமுறைகளாக பட்டாவிற்காக அலைக்கழிக்கபட்டு வருகிறார்கள். பட்டா வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி மூன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சென்னையில் பூர்வகுடி மக்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆக்கிரமிப்பு என கூறி மக்களை வெளியேற்றுவது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறுத்தி அச்சுறுத்துவது என அந்த பட்டியல் நீள்கிறது. இதுபோதாதென்று, பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காமலும் தமிழக அரசு தற்போது அலைக்கழித்து வருகிறது…

ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போஜராஜன் நகர், பெரியபாளையத்தம்மன் கோவில், காத்பாடா, ஸ்டான்லி நகர், லெபர் லேன் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பல முறை ஆட்சிகள் மாறி, பல்வேறு தலைவர்கள் ஆட்சிக்கட்டிலை அலங்கரித்தாலும், இந்த பட்டா பிரச்னைக்கு மட்டும் இதுவரை ஒரு விடியல் ஏற்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் ராயபுரம் தொகுதி மக்கள்.

எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அரசியல் கட்சியினர் ராயபுரம் தொகுதிக்கு வருவார்கள். இந்த முறை சர்வ நிச்சயமாக பட்டா வழங்கிவிடுவோம் என உறுதியளிப்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் வெற்றிப்பெற்றவர்களையும் பார்க்கவே முடியாது. பட்டா பிரச்னை பழையபடியே கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது என வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

பணம் இருப்பவர்கள் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து பட்டா வாங்கி விடுகின்றனர். ஆனால், கூலி வேலை பார்க்கும் தங்களுக்கு அதற்கெல்லாம் வசதி வாய்ப்பு இல்லாததால் இதுவரை பட்டா பெற முடியவில்லை என ஆதங்கத்துடன் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டா மட்டும் இப்பதி மக்களின் பிரதான பிரச்னை இல்லை. அதை தாண்டியும், குடிநீர் பிரச்னை, கால்வாய் பிரச்னை, கழிவுநீர் தேக்கம், சுகாதார சீர்கேடு என அடுத்தடுத்து பல பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடமே உள்ள நிலையில், மீண்டும் பழைய வாக்குறுதிகளோடு வேட்பாளர்கள் இப்போதே வரத் தொடங்கி விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறையாவது தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். தங்கள் நிலத்திற்கு பட்டா கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் ராயபுரம் பகுதி மக்கள் காத்துள்ளனர். இப்போதைக்கு அந்த மக்களால் முடிந்தது நம்புவதும், காத்திருப்பதும் மட்டும்தான்…

 

Tags: Leber LaneChennaiRayapuramPatta issueBhojarajan NagarPeriyapalayathamman TempleGathpadaStanley Nagar
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை அருகே மகப்பேறு உதவித்தொகை வழங்கியதில் ரூ. 20 லட்சம் மோசடி!

Next Post

உதகை அருகே பள்ளி கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல் – மாணவர்கள் போராட்டம்!

Related News

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

சேலம் : சரக்கு லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இபிஎஸ் கேள்வி!

பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனியாக கழன்றதால் பயணிகள் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

விஜய்யை கைது செய்ய வேண்டும் : உங்களில் ஒருவன் அமைப்பின் தலைவர் அறிவழகன்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் – வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

காசா போர் நிறுத்தத்தின் முக்கிய அம்சங்கள்!

லண்டனில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை : இந்திய தூதரகம் கடும் கண்டனம்!

காசா போர் தொடர்பாக ட்ரம்புடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை – 20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்!

சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ஆதவ் அர்ஜுனா!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies