அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துகிறது - மருத்துவர் ராமதாஸ்
Sep 10, 2025, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துகிறது – மருத்துவர் ராமதாஸ்

Web Desk by Web Desk
Nov 13, 2024, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துதாக  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பின்னாளில் இத்திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திமுக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான் இப்படியொரு அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான். ஆனாலும், திமுக அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள்.

2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது.

அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. திமுக அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படுவது உறுதி என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags: Sathur RamachandranDMKstalinDr Ramadossmagalir urimai thkgai
ShareTweetSendShare
Previous Post

ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உறுதி!

Next Post

திராவிட மாடல் ஆட்சி : வன்முறை குற்றங்களின் முகவரி – ஹெச்.ராஜா விமர்சனம்!

Related News

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies