சிக்கலில் ஐசிசி : பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி மறுப்பது ஏன் ? - சிறப்பு தொகுப்பு!
Aug 2, 2025, 04:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கலில் ஐசிசி : பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி மறுப்பது ஏன் ? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி சாபியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் செல்ல இந்தியா அணி மறுப்பது ஏன்? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி, இரு நாட்டு மக்களின் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒரு களமாக தான் பார்க்கப்படுகிறது. ஐசிசி ஒருங்கிணைந்த தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அதே வேளையில், இரு அணிகளுக்குமான கிரிக்கெட் தொடர்கள் கடந்த 16 ஆண்டு காலமாக நடத்தப்படுவதே இல்லை. ஐசிசி தொடர்களில் இரு அணிகளும் மோதும் வாய்ப்பு அமையும் போது மட்டுமே இரு அணிகளும் தங்களை பரிசோதனை செய்து கொள்கின்றன.

இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்றாலே உலகப் போருக்கு ஒத்திகை நடப்பது போல தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்யப்படும். கிரிக்கெட் வர்த்தகம் பன்மடங்கு உயரும், அதே சமயம் பயங்கரவாதமும் தலை தூக்கும். இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாத சூழலுக்கு முதல் முக்கிய காரணமே இதுதான்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் நட்சத்திர விடுதியில் நடந்த பயங்கரவாத சம்பவத்தால் நாடே அதிர்ந்தது. இந்த சம்பவத்தை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் நட்புறவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் பயணிப்பதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதனால் தான் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கின்றது.

இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் அணி மறுக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் இரண்டாம் வாரம் வரை, பாகிஸ்தானின் லாகூர், ஆகிய நகரங்களில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. 16 ஆண்டு காலமாக இந்திய அணி பாகிஸ்தான் வருகை தராததால் இந்த முறை இந்தியா ஒரு வேலை பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு விளையாடும் போது இந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய லாபகரமான தொடராக இருக்கக் கூடும்.

ஆனால் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்காத பட்சத்தில் இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெற தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வராது, போட்டிகளை காண வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் வர மாட்டார்கள், உள்ளூரில் கூட அதிகப்படியாக டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறாது என பல சிக்கல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்திக்க நேரும். இதனால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி வாயிலாக இந்தியாவுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தது. ஆனால் பேச்சு வார்த்தைகளும் சாதகமாக அமையவில்லை.

குறிப்பாக ஐசிசிக்கு மின்னஞ்சல் வாயிலாக பதில் அளித்துள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு பயணிக்கப் போவதில்லையென திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அந்த மின்னஞ்சலை அப்படியே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு திருப்பி அனுப்பிய ஐசிசி, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருந்த சாம்பியன்ஸ் கோப்பை திட்டமிடல் நிகழ்ச்சியையும் ரத்து செய்தது. முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் இந்திய அணி துபாய் போன்ற நாடுகளில் தங்கி இருக்கட்டும், போட்டிகளின் போது மட்டுமே தங்கள் நாட்டிற்கு இந்திய அணி விஜயம் செய்தால் போதும் என ஒரு ஆலோசனை வழஙகியது. ஆனால், இதையும் பிசிசிஐ ஏற்கவில்லை…

ஒருவேளை பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தும் முடிவை திரும்ப பெற்றால் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: IndiapakistanBCCIindia pakistanICC series.
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Next Post

பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு!

Related News

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

மத்தியப்பிரதேசம் : ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்!

2-வது நாளாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி!

திருவண்ணாமலை : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் : அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி மாயம்!

கொலம்பியாவில் தானியத்தை உலர்த்த நவீன டெக்னிக்!

திருப்பத்தூர் : புதிய பேருந்து நிலையம் அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு!

குஜராத் சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies