சென்னையில் அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம்!
Jul 4, 2025, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம்!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரம் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசை கண்டித்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பேசிய அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடுக்கு மேல் அதிகரித்துள்ளதால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்தார். தமிழகத்தில் 80 ஆயிரம் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், 30 ஆயிரம் மருத்துவர்கள் கூட பணியில் இல்லை எனவும் அவர் கூறினார்.

இதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு முதுநிலை மருத்துவர் சங்கம் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் ஆகியவற்றின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்ட நிலையில், புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் பணி செய்யாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சை, திருவாரூர், அரியலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர். புறநகர் பிரிவில் நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் ச்கிச்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தங்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புற நோயாளிகள் பிரிவிற்கு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால், அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை வழக்கம்போல் இயங்கின.

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு செயல்படாமல் முடங்கியதால், சிகிச்சை பெற வந்தவர்கள் அவதியடைந்தனர். இதனிடையே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோர் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags: The boy featured in the Nobel Book of World Records!doctor balaji stabbedKalaignar Centenary Super Speciality HospitalGovernment Doctors' AssociationRajiv Gandhi Government General Hospitalguindy
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் பெண் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் – டிடிவி தினகரன் கண்டனம்!

Next Post

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 15 நாட்கள் அலைக்கழிப்பு – நோயாளிகள் வேதனை!

Related News

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies