அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி - சிறப்பு கட்டுரை!
Aug 17, 2025, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், அப்பகுதி மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலைச் சுற்றி செம்புரான்குளம், பெருங்காடு,கோம்பை, பெரும்பள்ளம், சவரிக்காடு என ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. பளியர் பழங்குடியின மக்கள் வசித்துவரும் இக்கிராமங்களில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால் அவசரத் தேவைக்காக மருத்துவமனை செல்ல வேண்டுமென்றால் கூட டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலை தான் இன்றளவும் நீடிக்கிறது.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்திருக்கும் கருவேலம்பட்டியில் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவரும் தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை என எந்தவித அரசு அடையாள அட்டைகளும் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கருவேலம்பட்டி மக்களுக்கு அவ்வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021ம் ஆண்டு செம்பிரான் குளம் முதல் கருவேலம்பட்டி வரை 42 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டதாக விளம்பர பலகை வைக்கப்பட்டதே தவிர சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மக்கள் வாழ்வதற்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு,மின்சாரம், சாலை என எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தவித்துவரும் பழங்குடியின மக்கள், அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக கவனம் செலுத்தி கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: aliar tribekodaikanalDindigulbasic facilitiesSemburankulamPerungaduGombaiPerumpallamSavarikkadu.
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் தினம் – புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு பள்ளியில் கோலாகல கொண்டாட்டம்!

Next Post

திருவள்ளூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு – போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம்!

Related News

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies