அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி - சிறப்பு கட்டுரை!
Jun 15, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், அப்பகுதி மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலைச் சுற்றி செம்புரான்குளம், பெருங்காடு,கோம்பை, பெரும்பள்ளம், சவரிக்காடு என ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. பளியர் பழங்குடியின மக்கள் வசித்துவரும் இக்கிராமங்களில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால் அவசரத் தேவைக்காக மருத்துவமனை செல்ல வேண்டுமென்றால் கூட டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலை தான் இன்றளவும் நீடிக்கிறது.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்திருக்கும் கருவேலம்பட்டியில் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவரும் தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை என எந்தவித அரசு அடையாள அட்டைகளும் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கருவேலம்பட்டி மக்களுக்கு அவ்வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021ம் ஆண்டு செம்பிரான் குளம் முதல் கருவேலம்பட்டி வரை 42 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டதாக விளம்பர பலகை வைக்கப்பட்டதே தவிர சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மக்கள் வாழ்வதற்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு,மின்சாரம், சாலை என எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தவித்துவரும் பழங்குடியின மக்கள், அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக கவனம் செலுத்தி கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: PerungaduGombaiPerumpallamSavarikkadu.aliar tribekodaikanalDindigulbasic facilitiesSemburankulam
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் தினம் – புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு பள்ளியில் கோலாகல கொண்டாட்டம்!

Next Post

திருவள்ளூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு – போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies