அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி - சிறப்பு கட்டுரை!
Aug 1, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், அப்பகுதி மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலைச் சுற்றி செம்புரான்குளம், பெருங்காடு,கோம்பை, பெரும்பள்ளம், சவரிக்காடு என ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. பளியர் பழங்குடியின மக்கள் வசித்துவரும் இக்கிராமங்களில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால் அவசரத் தேவைக்காக மருத்துவமனை செல்ல வேண்டுமென்றால் கூட டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலை தான் இன்றளவும் நீடிக்கிறது.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்திருக்கும் கருவேலம்பட்டியில் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவரும் தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை என எந்தவித அரசு அடையாள அட்டைகளும் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கருவேலம்பட்டி மக்களுக்கு அவ்வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021ம் ஆண்டு செம்பிரான் குளம் முதல் கருவேலம்பட்டி வரை 42 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டதாக விளம்பர பலகை வைக்கப்பட்டதே தவிர சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மக்கள் வாழ்வதற்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு,மின்சாரம், சாலை என எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தவித்துவரும் பழங்குடியின மக்கள், அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக கவனம் செலுத்தி கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: PerungaduGombaiPerumpallamSavarikkadu.aliar tribekodaikanalDindigulbasic facilitiesSemburankulam
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் தினம் – புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு பள்ளியில் கோலாகல கொண்டாட்டம்!

Next Post

திருவள்ளூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு – போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம்!

Related News

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது – கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காக்க வேண்டும் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

அவதூறுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது – பிரதமர் மோடி

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies