அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி - சிறப்பு கட்டுரை!
Apr 29, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், அப்பகுதி மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலைச் சுற்றி செம்புரான்குளம், பெருங்காடு,கோம்பை, பெரும்பள்ளம், சவரிக்காடு என ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. பளியர் பழங்குடியின மக்கள் வசித்துவரும் இக்கிராமங்களில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால் அவசரத் தேவைக்காக மருத்துவமனை செல்ல வேண்டுமென்றால் கூட டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலை தான் இன்றளவும் நீடிக்கிறது.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்திருக்கும் கருவேலம்பட்டியில் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவரும் தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை என எந்தவித அரசு அடையாள அட்டைகளும் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கருவேலம்பட்டி மக்களுக்கு அவ்வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021ம் ஆண்டு செம்பிரான் குளம் முதல் கருவேலம்பட்டி வரை 42 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டதாக விளம்பர பலகை வைக்கப்பட்டதே தவிர சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மக்கள் வாழ்வதற்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு,மின்சாரம், சாலை என எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தவித்துவரும் பழங்குடியின மக்கள், அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக கவனம் செலுத்தி கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: PerungaduGombaiPerumpallamSavarikkadu.aliar tribekodaikanalDindigulbasic facilitiesSemburankulam
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் தினம் – புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு பள்ளியில் கோலாகல கொண்டாட்டம்!

Next Post

திருவள்ளூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு – போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies