அவதூறுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவில், ஜந்தர் மந்தரில் நடந்த சம்பவத்தை உலகம் முழுவதும் பார்த்துள்ளதாகவும், இளைஞர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
தன்னை தனிப்பட்ட முறையில் அவமதித்ததோடு, மறைந்த தனது தாயாரையும் இழிவாகப் பேசியதாகவும் தெரிவித்துள்லார். அதனை சுட்டிக்காட்டிய பிரதமர்,
வழிதவறியவர்களை சரியான பாதைக்கு கொண்டு வருவோம் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து பாரதத்திற்காக பணியாற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தவறான பாதையில் செல்பவர்களை எதிரிகளாக பார்க்காமல் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
















