மக்களவையில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா- 2026′ எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது
மக்களவை கூடியதும், பிறப்பு மற்றும் இறப்பு திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், வழக்கம்போல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர்கள் மீதான தடியடி சம்பவத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.
இதனால், மக்களவை மதியம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடியது. அப்போதும், மாணவர்கள் மீதான தடியடி விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி, சபையின் மையப் பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால், கூச்சல், குழப்பம் நிலவிய சூழலில், விவாதம் இல்லாமல் ‘பிறப்பு மற்றும் இறப்பு திருத்த மசோதா 2026’ குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
















