நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மை மற்றும் கண்ணியத்தை காக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய ஓம் பிர்லா,நாடாளுமன்ற வளாகத்திற்குள் பதாகைகள்கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை என்றும், இதுபோன்ற செயல்கள் அவையின் மரியாதையை பாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என பல உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தும், எழுத்து மூலமாகவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் முக்கியமான அமைப்பு என்பதால், அதன் மரியாதையை குறைக்கும் எந்த நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















