எதிர்க்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு, மசோதா மீது விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து தேர்தலில் தோல்வியடையும் அரசியல் கட்சிகள், இளைஞர்கள் தொடர்பான விவகாரங்களை கேடயமாகப் பயன்படுத்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கக்கூடாது என்று தாம் கருதுவதாக கூறியுள்ளார்.
மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்படுவதாகவும், அவர்கள் அதில் பங்கேற்க முன்வர வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் விவாதத்தில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
















