மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடக முதலமைச்சரை சந்திக்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் குறுவை விவசாயம் பாதிக்கப்பட்டதற்கு கர்நாடக அரசை காரணம் என்றும் அவர் கூறினார்.
‘முதல்வர் விஜய் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து தீர்வு காண வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
















