ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஒரு புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில், வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில், ஒரு தொழிலாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
















