பிறந்தது கார்த்திகை மாதம் - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
Nov 5, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிறந்தது கார்த்திகை மாதம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்ப கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். பின்னர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலையிட்டு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலர் ஐயப்ப மலைக்கு செல்ல இருமுடி கட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள ஐயப்பன் மணிமண்டபத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர். செட்டிநாயக்கன்பட்டி, டவுன்லோட் புதூர், பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகைபுரிந்து சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டனர்.

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சேலத்தில் உள்ள விநாயகர், முருகன், சிவன், ஐயப்பன் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பின்னர் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டனர். மேலும், கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இதேபோல, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள், அருவியில் புனித நீராடிவிட்டு மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். மேலும், இன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடிவிட்டு செல்கின்றனர்.

புதுச்சேரி கோவிந்தன்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீசபரிவாசன் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப சுவாமி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடந்து கோயிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர்.

Tags: Ayyappan templeKarthikaI monthdevotees starts fastMahalingapuram
ShareTweetSendShare
Previous Post

திருநெல்வேலி மேலப்பாளையம் திரையரங்கு வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீச்சு!

Next Post

பேராவூரணி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் சக்கரத்தில் பழுது!

Related News

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு!

பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies