தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் பேராவூரணி ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னர் பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்ட போது, பலத்த சத்தம் கேட்டதால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் சோதனை செய்ததில் ரயிலின் சக்கரம் இயங்காமல் இருந்தது தெரியவந்தது. பின்னர் ரயில் பெட்டி மாற்றப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
















