மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் - போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவிப்பு!
Aug 15, 2025, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் – போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் நிலத்தை காலிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து கிராம மக்களை கட்டுப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நோக்கில் அதிகாலை முதலே அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மண்ணெண்ணெய் கேன்களை கையில் ஏந்தி, தண்ணீர் தொட்டி மீது ஏறி கிராமமக்கள் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே தமிழ்நாடு அரசு மூர்க்கமாக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ள கிராம மக்கள், இதே நடவடிக்கைகளை தொடர்ந்தால் திமுக அரசு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து குடியிருப்புகளை காலிசெய்ய 23ம் தேதி வரை அதிகாரிகள் கால அவகாசம் வழங்கிய நிலையில், கிராம மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டனர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், சாலையிலேயே உணவு சமைத்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Tags: MaduraiChinna Utappu villageMadurai Airport expansion land issueChinna Utappu people protest
ShareTweetSendShare
Previous Post

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இந்திய சமூக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்தாய்வு!

Next Post

காரமடை செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies